யாழில் இந்து ஆலயத்திற்குள் பாதணிகளுடன் நுழைந்த சஜித்தின் காவலர்கள்

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள், யாழில் பல்வேறு பகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்குபற்றி வருகிறார்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் – கொம்பனிப்புலம் பகுதியிலும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்போது ஆரம்ப நிகழ்வாக குறித்த பகுதியில் உள்ள ஆலயத்தில் வழிபாடு இடம்பெற்றது.

இதன்போது சஜித்திற்கு பாதுகாப்பு கடமையில் இருந்த காவலர்கள் காலணிகளுடன் ஆலயத்திற்குள் நுழைந்தனர். எதிர்க்கட்சித் தலைவர் காலணிகளை கழற்றிவிட்டு சென்றபோதும் அவரது பாதுகாவலர்கள் இவ்வாறு செய்தது அங்கிருந்த மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியது.

Recommended For You

About the Author: webeditor