யாழில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில், மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கோண்டாவில் பகுதியில் மாணவர்களை இலக்கு வைத்து போதைப் பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்யப்படுவதாக கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேகநபரை மடக்கி சோதனை செய்த போது , 750 கிராம் போதை கலந்த பாக்கு உடைமையில் இருந்து மீட்கப்பட்டது.

இதனைஅடுத்து சந்தேகநபரை கைது செய்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor