உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு ஒத்தி வைப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு பணம் கிடைக்காத காரணத்தினாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

உரிய கொடுப்பனவுகள் செலுத்தப்படும் வரை தபால் மூல வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க அரச அச்சகங்கள் மறுத்துள்ளதால், தபால்மூல வாக்குப்பதிவுக்கான வாக்குச்சீட்டுகளை திட்டமிட்டபடி நாளை (15.02.2023) வழங்க முடியாது என அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor