சிவனொளிபாத மலையில் ஏறிக் கொண்டிருந்த போது குழந்தை பெற்றெடுத்த பெண்

சிவனொளிபாத மலைக்கு இரத்தினபுரி பகுதியில் இருந்து நேற்றய தினம் (11-02-2023) தரிசனம் செய்ய வந்த பெண்ணொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த 32 வயதுடைய பெண்னுக்கு ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பிறகு அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor