விமானப்படை விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து சுகோய்-30, மிராஜ்-2 ஆயிரம் ஆகிய 2 போர் விமானங்கள் பயிற்சிக்காக புறப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் மொரோனா என்ற இடத்தில் இரண்டு போர் விமானங்களும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது.

விமானபடைக்கு சொந்தமான இந்த விமானங்கள் தரையில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பாத்பூரிலும் விமானபடைக்கு சொந்தமான ஜெட் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அடர்ந்த பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரனையில் தெரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: admin