இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீன உயர் மட்ட குழு!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (14.01.2023) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஜனவரி 18ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான துணை அமைச்சர் சென் ஜாவோ தலைமையில் இந்தக் குழு இலங்கை வரவுள்ளது.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடல்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இலங்கை அரசாங்கத்தின் பிரதானிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor