விஷர் நாயை வளர்த்து வந்த பிரான்ஸ் நாட்டு பிரஜையை கைது!

விஷர் நோயால் பீடிக்கப்பட்டிருந்த நாய் ஒன்றை வளர்த்தார் என்ற குற்றச்சாட்டில் பிரான்ஸ் நாட்டு பிரஜையை தாம் நேற்று கைது செய்ததாக அளுத்கமமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெந்தோட்டை அங்காகொட ஸ்வர்ணபாய என்ற முகவரியில் வசித்து வந்த 84 வயதான எரிக் மார்ஷல் பேர்னாட் என்ற பிரான்ஸ் பிரஜையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்து பேரை கடித்த நாய்

இந்த நபர் 7 வயதான கொட்டேன் என்ற ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்த நாய் கடந்த 23 அம் திகதி 5 பேரை கடித்துள்ளதுடன் மூன்று நாய்களையும் கடித்துள்ளது.

பிரான்ஸ் பிரஜை வளர்த்த அந்த நாய் கடந்த 26 ஆம் திகதி இறந்து போயுள்ளது. இதனையடுத்து நாயின் தலையை பொரள்ளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்த போது, நாய்க்கு விஷர் நோய் ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாய் கடிக்கு உள்ளான அளுத்கமை களுவாமோதர பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பிரான்ஸ் பிரஜையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor