கொரொனோவால் கொத்து கொத்தாக மடியும் சீனர்கள்

சீனாவில் கொரோனா தொற்று தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஊகான் மகாணத்தில் தொடங்கிய கொரோனா பரவல் என்பது உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் இழப்புகளை கொடுத்தது. இந்த கொரோனா பெருந்தொற்று உலகத்தை 3 ஆண்டுகளாக அச்சுறுத்தி வருகிறது.

தற்போது தான் உலக நாடுகள் இந்த நோய் தொற்றில் இருந்து சற்று நிம்மதி பெருமூச்சு விட்டு வரும் நிலையில், மீண்டும் சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக வெளியாகும் செய்திகளால் மீண்டும் பீதி அடைந்துள்ளனர்.

சீனாவில் கடந்த டிசம்பர் 1 முதல் 20 ஆம் திகதி வரை 24 கோடியே 80 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உடல்கள் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள வீடியோக்கள் வெளியாகி உலக நாடுகளை நடுங்க வைத்துள்ளது.

சீனாவில் கடந்த டிசம்பர் 1 முதல் 20 ஆம் திகதி வரை 24 கோடியே 80 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: webeditor