யாழில் சிசுவின் சடலத்தை நாய் உண்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது!

சிசு ஒன்றின் சடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அப் பொலிஸாரால் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

மேலும் குறித்த தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் குறித்த சிசுவை புதைத்தவர் அல்லது கொலை செய்தவர் என்று சந்தேகிக்கும் நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மருதங்கேணி போலீஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: webeditor