தங்கையின் நகையை திருடிய இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கையின் தங்க நகையை திருடிய இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துரத்தலின் போது வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இருந்து நேற்று பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரால் திருடப்பட்ட தங்க நகையின் பெறுமதி சுமார் 11 லட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.

மேலும் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: webeditor