யாழில் இரு நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற முரண்பாட்டால் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (25.12.2022) பதிவாகியுள்ளது.

இந்த தாக்குதலில் காயமடைந்தவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு
இந்த சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor