யாழில் மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

மதில் இடிந்து விழுந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் யாழ்ப்பாணம் தும்பளை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

தும்பளை செம்மண்பிட்டி பகுதியை சேர்ந்த விக்னராஜா கிருஷ்ணன் (வயது 32) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம்
வீட்டின் மதில் ஏறி நின்ற போது, மதிலுடன் சேர்ந்து விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த குறித்த இளைஞன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சிகிச்சை பழநின்று அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor