பெண்களின் கால்களில் மெட்டி அணிவதன் ரகசியம் என்ன தெரியுமா?

திருமணத்தில் தாலிக்கு எவ்வளவு முக்கியத்தும் அளிக்கப்படுகின்றதோ அந்த அளவுக்கு மெட்டியும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

கல்யாணம் ஆன பெண்கள் தங்களது கால்விரல்களில் மெட்டிகளை (மிஞ்சி) அணிகின்றனர்.

பாரம்பரியத்திற்காகவும் நாகரிகத்திற்காகவும்தான் மெட்டி (மிஞ்சி) அணிகின்றார்கள் என்றுதான் பலரும் நினைத்திருப்போம் ஆனால் மெட்டி அணிவதால் பல நன்மைகளை நாம் பெறுகின்றோம் என்பதுதான் அறிவியல் உண்மை.

கருப்பை பாதுகாப்பு
மெட்டிகள் பல டிசைன்களில் கிடைக்கின்றது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவிதத் தொடர்பு உண்டு. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

எனவே, பெண்கள் காலில் மெட்டி அணிவதால் கருப்பைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்த மெட்டியும் வெள்ளியில் செய்ததாக இருக்க வேண்டும்.

வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றல் கொண்டது என சொல்லப்படுகின்றது.

கர்ப்ப காலம்
பெண்களின் கர்ப்ப காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும்.

வெள்ளியிலான மெட்டி அணிந்து நடக்கும்போது அது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியைக் குறைக்கிறதாம்.

Recommended For You

About the Author: webeditor