யாழிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் வடை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை வாங்கி உள்ளார்.

பின்னர் வீடு சென்று வடையை சாப்பிட்ட போது வடைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது அவதானிக்கப்பட்டு உடனடியாக யாழ்.மாநகர சபையின் சுகாதார பரிசோதர்களுக்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் யாழ் மாநகர சபையின் சுகாதார பரிசோதர்கள் உடனடியாக குறித்த கடைக்கு விஜயம் மேற்கொண்டு கடையை பரிசோதித்ததோடு கடைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor