ஹெரோயின் போதை பொருளுடன் மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலன்னறுவை, தம்பாளையைச் சேர்ந்த மூவர் புலஸ்திபுர பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பொதி செய்யப்பட்ட 12 ஹெரோயின் பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

பொலிஸ் விசாரணை

33 மற்றும் 17 வயதுடைய இருவருமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பிரதான நபர் நீண்ட நாட்களாக போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்வதோடு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்த தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: webeditor