ரயிலில் மோதி பரிதாபமாக பலியான குடும்ப பெண்!

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதம் மோதி இன்று (28) காலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை, பூம்புகார் வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தாயான மேரி சாந்தி (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, உயிரிழந்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து திருகோணமலை தலைமையக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin