யாழில் முதலை! பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு பகுதியில் உயிரிழந்த நிலையில் முதலையொன்று வீதியில் காணப்பட்டுள்ளது

அச்சுவேலியில் இருந்து தொண்டைமானாறு செல்லும் வீதியிலேயே முதலை வீதிக்கு குறுக்காக உயிரிழந்த நிலையில் இருப்பதாக இன்று அவ்வீதியால் பயணித்தவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த முதலையை அகற்றுவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொண்டைமானாறு ஏரியில் முதலை இருப்பதாக ஏற்கனவே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: S.R.KARAN