பிள்ளையானின் சகோதரர் தொடர்பில் ஆவணங்களை சமர்ப்பிக்க தயாராகும் சாணக்யன்

கனடாவிற்கு ஆட்கடத்தல் செய்து பணம் உழைக்க வேண்டிய தேவை தனக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவுஸ்திரேலியாவிற்கு இராஜாங்க அமைச்சர சிவநேசத்துரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சகோதரர் ஒருவரே ஆட்கடத்துவதாக தகவல்கள் உள்ளது, அந்த ஆவணங்களை சபையில் சமர்ப்பிக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நானா, சந்திரகாந்தனா காணி அபகரிப்பில் ஈடுபடுவது என்பதை கண்டுபிடிக்க ஜனாதிபதி உடனடியாக விசேட குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor