யாழ் இளவாலை பகுதியில் போதைப்பொருளுடன் கைதான இரு நபர்கள்!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவெளி வீதியில் சிறிய அளவு கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இளவாலை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor