யாழில் உயிரிழந்தவாறு கரையொதுங்கிய டொல்பின்

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பருத்தியடைப்பு கடற்பரப்பில் இன்று காலை உயிரிழந்த நிலையில் டொல்பின் மீன் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

குறித்த டொல்பின் மீன் சுமார் 14 அடி நீளமான என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மீனில் காயம்

சம்பவம் தொடர்பில் அதிகாரிகளுக்கு மக்களால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் அரச அதிகாரிகளும் பொலிஸாரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

மேலும் இந்த டொல்பின் மீன் உயிரிழந்து கரையொதுங்கியமைக்கான காரணத்தை கண்டறிய கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மீனில் காயம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor