பிரியாணி கேட்ட மனைவியை தீ வைத்து கொளுத்திய கணவர்

சென்னையில் பிரியாணி கேட்ட மனைவியை கணவர் தீவைத்து கொளுத்தி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரியாணி கேட்ட மனைவி
சென்னை அயனாவரம் தாகூர் நகரை சேர்ந்தவர் கருணாகரன். ரயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு நான்கு பிள்ளைகளும், பத்மாவதி என்ற மனைவியும் இருக்கின்றனர்.

பிள்ளைகள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில், சம்பவத்தன்று கருணாகரன் பிரியாணி வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில், அதனை அவதானித்த மனைவி தனக்கும் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த கருணாகரன் பத்மாவதி மீது மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.

தீயில் பற்றி எரிந்த பத்மாவதி அலறியபடி கணவரை வந்து கட்டிப்பிடித்துள்ளார். இதில் கருணாகரனுக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பரிதாபமாக உயிரிழந்த மனைவி
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை இருந்து வந்த இருவரில் பத்மாவதி உயிரிழந்துள்ளதையடுத்து, தான் இறப்பதற்கு முன்பு வாக்குமூலமும் அளித்துள்ளார்.

கணவர் மட்டும் கடையிலிருந்து பிரியாணி வாங்கிவந்து சாப்பிட்டதாகவும், தனக்கு கேட்டதற்கு வாக்குவாதம் ஏற்பட்டது எனவும், இதில் என் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்து கொழுத்தியதாகவும் கூறியுள்ளார்.

பத்மாவதியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கருணாகரன் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றாராம்.

Recommended For You

About the Author: webeditor