இந்தியாவில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 1,046 ஆக இருந்தது. நேற்று 1,188 ஆக உயர்ந்த நிலையில் இன்று 1,321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 57 ஆயிரத்து 149 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 2, மத்திய பிரதேசம், மேற்கு வங்கத்தில் தலா ஒருவர் என நேற்று 4 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 5-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர்.

மொத்த பலி எண்ணிக்கை 5,30,461 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,457 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 10 ஆயிரத்து 590 ஆக உயர்ந்தது. தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 16,098 ஆக சரிந்துள்ளது. இது நேற்றைவிட 145 குறைவாகும்.

Recommended For You

About the Author: webeditor