நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு!

நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பேருந்து மோதியதில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் கம்பஹா – யக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் இன்றைய தினம் (30-10-2022) தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய நாடாளுமன்றத்துக்குச் சொந்தமான பஸ்ஸின் சாரதி தப்பிச் சென்றுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்து ஜா – எல பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வை முடித்துக் கொண்டு அதில் பங்கேற்றவர்களை வீடுகளுக்கு அழைத்துச் சென்ற போதே இடம்பெற்றுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பஸ்ஸின் சாரதி பொல்கஹாவெல பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor