யாழ். இருபாலையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

நல்லூர் கல்வியங்காடு அரச வீதியை சொந்த இடமாகவும் தற்போது டென்மார்க்கில் வசிப்பவருமான சிறந்த சமூக சேவையாளரான திரு எஸ்.விஸ்வநாதன் (விஸ்வா) அவர்களின் நாற்பத்தியொன்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் நிதி அனுசரணையில் இன்று ஜே/158 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வசந்தபுரம் கிராமத்தில் உள்ள கொண்டலடி வைரவர் ஆலயத்தில் விசேட வழிபாட்டு நிகழ்வுடன் அவ்வூர் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

அத்துடன் வசந்த நிலா முன்பள்ளி சிறார்கள் மற்றும் மாணவர்களுக்கு புத்தக பைகளும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் முன்பள்ளி மாணவர்களுக்கான உணவுப் பாத்திரங்களும் வசந்த நிலா முன்பள்ளி ஆசிரியரான திருமதி சுரேஷ்குமார் இராஜேஸ்வரியிடம் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக சமூக சேவையாளரும் முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேச சபை,யாழ் மாநகர சபை,வட மாகாண சபை,யாழ். மாவட்ட உறுப்பினரான ந.விந்தன் கனகரட்ணமும்,கெளரவ விருந்தினராக வசந்தபுரம் மாதர் அபிவிருத்திச் சங்க உப தலைவி திருமதி செல்வமலர் இராசேந்திரம் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர், மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடை பெற்றன.

Recommended For You

About the Author: webeditor