இலங்கை தமிழ் அரசியல் கைதி ஒருவருக்கு கிடைத்த உயரிய விருது!

அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், விருதொன்றை தன்வசப்படுத்திக் கொண்டார்.

இந்த விருது கொழும்பில் இன்றைய தினம் (28-10-2022) நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆரூரன் எழுதிய “ஆதுரசாலை” என்ற தமிழ் நாவலுக்கு சிறந்த நாவல்களாக விருது வழங்கப்பட்டது.

கொழும்பு – பித்தலை சந்தியில் 2006ம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்.

சிறையில் இருந்தவாறே, புத்தகமொன்றை எழுதியமைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ளார்.

இந்த 8 புத்தகங்களும், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வுக்கு, பரிந்துரை செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.

Recommended For You

About the Author: webeditor