தேயிலை தூள் என நினைத்து பூச்சி கொல்லி மருந்தை பருகியதால் ஜவர் உயிரிழப்பு!

தேயிலை துாள் என்று கருதி பூச்சிக்கொல்லி மருந்தில் தயாரிக்கப்பட்ட தேனீரை பருகியமை காரணமாக ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம், இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் ஒரு வீட்டின் மூவர் மற்றும் அயலவர்கள் என்று ஐந்து பேர் மரணமாகினர்.

விசாரணை
நெற்பயிருக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியே தவறுதலாக தேயிலை துாள் என்ற கருதி தேனீர் தயாரிக்கப்பட்டுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

வீட்டின் பெண் தயாரித்த இந்த தேனீரால், வீட்டில் உள்ள மூவர் மற்றும் அயலர்கள் இருவர் மரணமாகியுள்ளனர்.

எனினும் இந்த சம்பவம் தொடர்பில் தேனீர் தயாரித்த வீட்டின் பெண் மீது காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

  • Recommended For You

    About the Author: webeditor