பாணின் விலையை தீர்மானிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்களுக்கு அனுமதி!

தாங்களாகவே பாணின் விற்பனை விலையை தீர்மானிக்குமாறு பேக்கரி உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் (ACBOA) தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாணுக்கான விலைக் கட்டுப்பாட்டு பொறிமுறை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், பேக்கரி தொழிலுக்கு தீர்வுகளை வழங்காமல், குறைந்த எடை கொண்ட பாண்களை கண்டறியும் வகையில் சோதனைகளை மேற்கொள்வது அர்த்தமில்லாத செயல்.

சோதனையிடப்படும் பேக்கரிகள்
450 கிராம் தரநிலையை பேக்கரிகள் கடைப்பிடிக்கின்றனவா என்பதை தீர்மானிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை, பேக்கரிகளை சோதனையிட ஆரம்பித்துள்ளது.

எடை பிரச்சினைகளை சரிபார்ப்பதற்காக சுமார் 70 பேக்கரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பேக்கரி உரிமையாளர்கள் 450 கிராம் எடையுள்ள பாணை தயாரித்து தங்கள் செலவுகளை ஈடுகட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor