நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டி மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.

எடண்டேவெல கால்வாயில் விழுந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 58 வயதுடைய நபர் ஒருவர் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

5 பேரை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று குளியாப்பிட்டிய தியவளையிலிருந்து அருவ்பொல நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

எடண்டேவெல கால்வாய்க்கு அருகில் உள்ள நீர் மட்டத்தை பரிசோதிப்பதற்காக வாகனத்தை விட்டு இறங்கிய வேன் சாரதி கால்வாயில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாவலப்பிட்டி, கலபடவத்த பிரதேசத்தில் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் தனது உறவினரின் இல்லத்திற்குச் சென்றிருந்த போது இந்த கோர விபத்தை சந்தித்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor