கல்கிஸ்ஸ துப்பாக்கிச்சூடு – மற்றுமொரு நபர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ, வட்டரப்பல வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மற்றைய நபரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கல்கிஸ்ஸ வட்டரப்பல வீதியைச் சேர்ந்த 36 மற்றும் 20 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இன்று... Read more »

சீனாவின் புதிய வைரஸ் குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம்

இந்த நாட்களில் சீனாவில் பரவி வரும் HMPV வைரஸ், சில சந்தர்ப்பங்களில் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்ட ஒரு வைரஸ் நிலை என மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வைரஸ் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த தேவையில்லை என வைரஸ் நோய்க்கான விசேட வைத்திய நிபுணர்... Read more »
Ad Widget

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில்

பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, தற்போது நெல் களஞ்சியசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மூன்று இலட்சம் மெற்றிக் டன் நெல் களஞ்சியப்படுத்தக்... Read more »

‘ரஷ்யப் படையில் வடக்கு தமிழ் இளைஞர்கள் விவகாரம் பற்றி பேச்சுவார்தை நடத்தப்படும்

ரஷ்யப் படையில் வடக்கின் தமிழ் இளைஞர்கள் வலிந்து இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விரைவில் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார். வடக்கின் தமிழ் இளைஞர்கள் மற்றும், ஏனைய இலங்கையர்கள் போரில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து ரஷ்ய வெளிவிவார அமைச்சருடன், அமைச்சர் விஜித... Read more »

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள்.!

நாடளாவிய ரீதியில் 30,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் மற்றும் அனைத்து பாடங்களுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார். புதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படும் வரை இடமாற்றம் பெற முடியாது... Read more »

வெருகல் பகுதியில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பதாகை!

வெருகல் பகுதியில் புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்லியல் பதாகை! வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான் பகுதியில் நேற்று (06.01.2025) மாலை தொல்லியல் திணைக்களத்தினால் “1 KM வட்டவான் தொல்லியல் நிலையம்” என குறிப்பிட்டு பதாகை ஒன்று நடப்பட்டுள்ளது... Read more »

தெஹிவளை Zooஇல் இருந்த ஒரேயொரு ஒராங்குட்டானும் இறந்தது

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் இருந்த ஒரேயொரு ஒராங்குட்டானும் இறந்துள்ளது. இறக்கும் போது அதற்கு, சுமார் 15 வயது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தோனேசியாவில் இருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு நன்கொடையாக கிடைத்த கோனி ஒராங்குட்டான் தம்பதிக்கு, 2009ஆம் ஆண்டு இந்த ஒராங்குட்டான் பிறந்தது. இதன் மரணம் குறித்து... Read more »

13 இலட்சம் ரூபாயை தாண்டிய தனிநபர் கடன் !

அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கையின்படி, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் செலுத்தப்பட வேண்டிய மொத்த பொதுக் கடன் தொகை 29,150 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் இது 6.47 வீத அதிகரிப்பாகும்... Read more »

இன்னொரு தோல்வியைத் தவிர்க்க, நாளை நாம் வெல்ல வேண்டும்

சுற்றுலா இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) நடைபெறவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றி பெற்றதால் தொடரை இழக்காமல் இருக்க... Read more »

இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்ற 13 குடும்பங்கள் மீண்டும் இலங்கைக்கு அனுப்ப கோரி மனு கையளிப்பு.

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச்  சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர். இலங்கையில்... Read more »