சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொவிட் தொற்று

சிங்கப்பூரில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 05 ஆம் திகதி முதல் 11 திகதி வரை மாத்திரம் சுமார் 26,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் 250 பேர் வைத்தியசாலைகளில்... Read more »

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா

உலகளாவிய ரீதியில் எதிர்வரும் ஜூன் மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள ஓரினச்சேர்க்கையாளர்களின் (LGBTQ) கொண்டாட்டங்களை இலக்காகக் கொண்டு தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் எச்சரிக்கை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த கொண்டாட்டங்களின் போது... Read more »
Ad Widget

மின் துண்டிப்பால் சுமார் இரண்டு இலட்சம் பேர் இருளில்

இலங்கைத்தீவில் சுமார் இரண்டு இலட்சம் பாவனையாளர்களின் மின்சார இணைப்பு முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் நிலவும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக மின்சார இணைப்பை இன்னும் அவர்கள் மீளப் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அண்மைய காலப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 26 ஆயிரத்து 8 பேரின்... Read more »

இன்று எதுவெல்லாம் சாதனையாக மாறிவிட்டது என நினைக்கையில் சிரிப்பாகவுள்ளது..

அண்மையில் சம்மாந்துறை கல்வி வலயத்துக்கு கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். இவரை நியமித்தது சாதனை என ஒரு அரசியல் குழுவினர் உரிமை கோருகின்றனர். எதுவெல்லாம் எமது அரசியல் வாதிகளின் சாதனையாகிவிட்டது என பார்த்தீர்களா? இவர் நியமிக்கப்படாது விட்டால், இன்னுமொருவர் நியமிக்கப்பட்டிருப்பார். இதிலென்ன சாதனை உள்ளது.... Read more »

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல்: சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் விளக்கமளித்தார்

இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தால் சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று சனிக்கிழமை (18) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

முள்ளிவாய்க்கால் கஞ்சி விவகாரம்: கனடாவில் இலங்கை இராஜதந்திரிகளுக்குப் பதிலளிக்க சிரமம்

திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் அண்மையில் நால்வர் கைது செய்யப்பட்டமை மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதில் கனடாவிலுள்ள இலங்கை இராஜதந்திர அதிகாரிகள் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவு வாழ்கின்ற நிலையில் இலங்கை... Read more »

அனுஷ்காவுக்கு டும் டும் டும்…

‘ரெண்டு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. இத் திரைப்படத்தைத் தொடர்ந்து, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அத்தோடு அருந்ததி, ருத்ரமாதேவி, பாகமதி ஆகிய திரைப்படங்களில் நடித்து வரலாற்றுப் படங்கள் என்றால் அது அனுஷ்காவுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கும்... Read more »

Meta நிறுவனத்துக்கு எதிராக: விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

மெட்டா நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரபூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் குழந்தைகளிடம் பல்வேறு போதை பழக்கங்கள் ஊக்குவிக்கப்படுவதாகவும் அது குழந்தைகளின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.... Read more »

காட்டெருமைகள் காலநிலை மாற்றத்தை சரி செய்யுமா?: ருமேனியா ஆய்வு

தற்போது தொடர்ந்து வரும் காலநிலை மாற்றங்களினால் அநேக பிரச்சினைகள் உண்டாகின்றன. அந்த வகையில் இந்த காலநிலை பிரச்சினைகளை சமாளிக்க காட்டெருமை உதவும் என ருமேனியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 200 வருடங்களுக்கு முன்பு ருமேனியாவில் காணாமல் போன ஐரோப்பிய காட்டெருமைகளை ரீவில்டிங்... Read more »

ஈரானில் வெள்ளப்பெருக்கினால் இதுவரையில் 7 பேர் உயிரிழப்பு

ஈரான் நாட்டில் கடந்த சில தினங்களாகவே கடுமையான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொரசன் ரசவி மாகாண மசாத் நகரில் பெய்த கனத்த மழையின் காரணமாக, அங்குள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. வெள்ளத்தில் அங்குள்ள குடியிருப்புக்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, மின்கம்பங்கள், மரங்கள்... Read more »