யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் போராட்டத்தில் ஈடுபடும் கனிஷ்ட சிற்றூழியர்கள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது கனிஸ்ட சிற்றூழியர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வாரத்தில் ஐந்து நாள் வேலை நாட்களாக மாற்றுதல், மின்கட்டணத்தை குறைத்தல் ஆளணி பற்றாக்குறையை நீக்குதல், கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளன் றுக்சான் வெல்லனவை பதவி நீக்க கோரியே போராட்டம் இடம் பெறுகிறது. கனிஸ்ர... Read more »

யாழ்,வாதரவத்தையில் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

யாழ்/வாதரவத்தை விக்னேஸ்வர வித்தியாலயத்தில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூபா இருபதினாயிரம் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரான திரு விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நிதி ஏற்பாட்டில் அறக்கட்டளையின் இலங்கைக் கிளையின் நிர்வாகிகளான செயலாளர் ந.விந்தன் கனகரட்ணம்,கல்விப் பிரிவு... Read more »
Ad Widget

விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது. அதேசமயம் இளைஞனின்... Read more »

2023ஆம் ஆண்டிற்கான பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணி விநியோகம் ஆரம்பம்

பாடசாலை மாணவர்களுக்கான 2023ஆம் ஆண்டின் சீருடை துணி விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில் இடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சப்புகஸ்கந்தை பி.எப் பெரேரா களஞ்சிய வளாகத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நிகழ்வில் இலங்கைக்கான... Read more »

அரச விமானங்களை பயன்படுத்துவோருக்கான முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டு பயணங்களுக்கான விமான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் நிதியைப் பயன்படுத்தும்போது, ஏனைய அதிகாரிகள் சாதாரண (Economy Class) வகுப்பு விமான டிக்கெட்டுகளை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். எனினும் பிரதம நீதியரசர், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள்,... Read more »

நாடு முழுமையாக முடக்கப்படும்

மார்ச் முதலாம் திகதி முதல் நாடு முடக்கப்படும் என துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஷ்யாமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் முதல் திகதியில் இருந்து... Read more »

வெளிநாடு சென்ற மனைவியை நாட்டிற்கு வரவழைக்க நாடகமாடிய கணவன் கைது!

வெளிநாடு சென்ற மனைவியை நாட்டிற்கு வரவழைக்க கணவன் தனது மூன்று பிள்ளைகளையும் தங்காலை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அலுவலகத்திற்கு முன்பாக விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இதன்போது ஒரு வயது, ஆறு மற்றும் பத்து வயதுடைய மூன்று பிள்ளைகளையே இவ்வாறு விட்டுச்சென்றுள்ளதாக தங்காலை தலைமையகப் பொலிஸார்... Read more »

நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் நீரிலிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆய்வாளர்களால் நடத்தப்பட்ட தேசிய ஆய்வில் இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சி பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி... Read more »

நாட்டில் இடம் பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கண்டுகொள்ளாத பொலிசார்

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் உள்ள அரச காணியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி குறித்த... Read more »

வடக்கு கிழக்கு மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரிய படுத்த முனையும் வசந்த முதலிகே

இலங்கையில் பயங்கரவாதச் சட்டத்தினால் வடக்கு, கிழக்கு மக்கள் பல வருடங்களாக அனுபவித்து வரும் பிரச்சினைகளை தெற்கில் உள்ள சமூகத்திற்கு தெரியப்படுத்தி அந்த சட்டத்தை இல்லாதொழிக்க பாரிய தலையீடு மேற்கொள்ளப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். அதன்படி பயங்கரவாதச்... Read more »