நாடு முழுமையாக முடக்கப்படும்

மார்ச் முதலாம் திகதி முதல் நாடு முடக்கப்படும் என துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வருமான வரிச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டுமென துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பின் உறுப்பினர் ஷ்யாமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் முதல் திகதியில் இருந்து நாட்டை முடக்குவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய வருமான வரிச் சட்டத்திற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor