யாழில் 12 வயதுச் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 36 வயது நபர் கைது!

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள 12 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியில் துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சிறுவனிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தையடுத்து சந்தேக நபர் இன்று இரவு கைது செய்யப்பட்டார்.... Read more »

யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் பொறுப்பதிகாரி ச,விஜிதரன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரின் களவிஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு... Read more »
Ad Widget

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். பொலிஸார் விசாரணை இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி... Read more »

யாழில் வாகன உரிமையாளர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

யாழ்ப்பாண குடா நாட்டில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களிடமிருந்து இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கென வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் – சுன்னாகம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு... Read more »

யாழில் சீரற்ற காலநிலையால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்தது!

யாழில் சீறற்ற காலநிலையினால் 200 வருடம் பழமை வாய்ந்த மலைவேம்பு சரிந்து விழுந்துள்ளது. 200 வருடம் பழமை யாழ்ப்பாணம் கச்சேரி வீதியில் சீரற்ற காலநிலையின் காரணமாக இருநூறு வருடங்கள் பழமை வாய்ந்த மலைவேம்பு மரம் ஒன்று நேற்று இரவு 11 மணியளவில் சரிந்து விழுந்ததால்... Read more »

யாழிற்க்கான தொடருந்து பயணம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு!

பொது இடங்களில் மதுபானம் அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது. எனினும் குடிபோதையில் உல்லாசமாக இருப்பவர்கள் யாழ்ப்பாணம் செல்லும் வார இறுதி தொடருந்தை நடமாடும் மதுசாலையாக மாற்றுகின்றனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்துக்கான தொடருந்து பயணம் தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த வார இறுதியில்... Read more »

யாழ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு... Read more »

யாழில் காதலை நிராகரித்த மைத்துனிக்காக கனடா சென்று மாட்டிக்கொண்ட இளைஞன்

யாழில் கடந்த பல வருடங்களாகவே இங்குள்ள பெண்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடும் படலங்கள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் உள்ளூரில் உள்ள இளைஞர்கள் பலர் திருமண வாழ்க்கை கைகூடாத நிலையில் ஏக்கத்துடன் காத்துநிற்கின்றனர். அதிலும் சில இளைஞர்கள் எப்படியாவது வெளிநாடுகளுக்கு சென்று ஓரிரு வருடங்கள்... Read more »

யாழில் பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனையில் இருவர் கைது!

யாழ்.அளவெட்டி நரியிட்டான் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் தெல்லிப்பழை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையின் போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்கள் என... Read more »

பூசகர் வேடத்தில் யாழ் ஆலயம் ஒன்றில் இடம் பெற்ற திருட்டு!

யாழில் உள்ள ஆலயம் ஒன்றில் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளது என ஆலய நிர்வாகத்தால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வர ஆலயத்தின் மூலஸ்தான லிங்கேஸ்வரர் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் ஆலயத்துக்குப் பூசகர்... Read more »