
புதுக்குடியிருப்பு ஒளிரும் வாழ்வு அமைப்பின் கோரிக்கைக்கு அமைய மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியாக உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார உதவிப்பணியாக அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கான ((ITR)) பணிப்பாளருமான... Read more »

நல்லூர் பிரதேச சபையின் செயலாளராகச் சுமார் ஐந்தரை வருடங்கள் சிறப்பாகக் கடமையாற்றிய சு.சுதர்ஜன் வலி.வடக்குப் பிரதேச சபையின் புதிய செயலாளராகத் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். யாழ்.இளவாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட சுதர்ஜன் இளமைத் துடிப்பும், செயலில் நேர்த்தியும் மிக்கதாக காணப்படுகின்றார்.. இவர் கடந்த-2011... Read more »

காங்கேசன்துறையில் இருந்து கல்கிஸ்ஸ வரை நேற்றிரவு பயணித்த நகரங்களுக்கிடையிலான அதிவேக ரயில் கொள்ளுப்பிட்டிக்கு அருகில் ரயில் நிலையத்திற்குத் திரும்பும் போது தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக ரயில் பாதை பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயிலை மீண்டும் தண்டவாளத்திற்குள் உள்வாங்குவதற்கான பணிகள்... Read more »

தமிழர் தாயகத்தில் தற்போது நினைவேந்தல் செய்வதற்காக முட்டி மோதுபவர்கள் நெருக்கடி காலங்களில் எங்கிருந்தார்கள் என்பதை சிந்திக்க வேண்டும் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பினர். யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பப்பட்ட கேள்விக்கு... Read more »

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,1987ம் ஆண்டு செம்டம்பர் மாதம் 15ம் திகதி தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் அடங்கிய முக்கிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து... Read more »

ஒற்றையாட்சிக்கும் 13ஆம் திருத்தத்திற்கும் எதிராக உண்ணாநோன்பிருந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தியாக தீபம் அண்ணன் திலீபன் அவர்களின் வழியில் பயணிக்க அவரின் நினைவுநாளில் சபதமெடுப்போம் என்று கூறுவது எந்த வகையிலும் அரசியலாகாது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாஷ் தெரிவித்தார்.... Read more »

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான நிலையம் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட கட்டடத் தொகுதியின் கீழ்த் தளத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாற்றுத் திறனாளிகளுக்கான நிலையம் இன்று(15-09-2022) காலை 9.30 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில்... Read more »

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாகி திலீபன் நினைவாலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பித்ததுடன்இ... Read more »

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது நினைவு தினம், இன்றைய தினம் யாழ்ப்பாணம் வேலணை வங்களாவடி சந்தியிலுள்ள நினைவுத்தூபியில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்கள், போராளிகளின் பெற்றோர், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.... Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெரு பகுதியில் 380 லிட்டர் மண்ணெண்ணெயினை விற்பனை செய்தவரும், அதனை வாங்கிய நபரும் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று(14.09.2022)இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை... Read more »