யாழில் இளைஞன் மரணம்! சுவிஸ் தூதுவர் கவலை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் உயிரிழந்த சம்பவம் குறித்து இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறிவொல்ட் கவலை வெளியிட்டுள்ளார். அவரது X தளத்தில் இடப்பட்ட பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளார். மேலும் தனது பதிவில், பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை இளைஞன் உயிரிழந்தமை... Read more »

வட்டுகோட்டை இளைஞனின் மரணம் தொடர்பான அறிக்கை பொலிசாரால் வெளியீடு!

பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ள யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பொலிஸ் காவலில் இருந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். வீடு ஒன்றில் 90,000 ரூபாய் பணம் மற்றும் 16 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உயிரிழந்த இளைஞனும் அவரது... Read more »
Ad Widget

யாழில் பண மோசடி அதிகரிப்பு!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்றன என யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். ஜெர்மன், சுவிட்ஸர்லாந்து, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி பண மோசடி இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.... Read more »

வட்டுக் கோட்டை இளைஞனுக்காக ஒன்று திரளும் சட்டத்தரணிகள்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில், 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இளைஞனின் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் எதிர் வரும் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளன. 40க்கும் மேற்பட்ட... Read more »

இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது! அமைச்சர் டக்ளஸ் 

இளைஞனின் மரணம் இதயத்தை வருத்துகிறது!   சந்தேகத்தின் பேரில் கைதான சித்தங்கேணி இளைஞன் நாகராஜா அலெக்ஸ் அவர்கள் மரணமான செய்தி எல்லோர் இதயங்களையும் வருத்துகின்றது,..   கடுமையான குற்றவாளிகள் கூட நீதித்தீர்ப்பின் பிரகாரம் சிறையிருந்து வருகிறார்கள். சந்தேகத்தின் பேரில் கைதான ஒருவர் முழுமையான நீதி... Read more »

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பு மாவீரர்களுக்கு மலரஞ்சலி

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் வாரம் இன்று செவ்வாய்க்கிழமை (21.11.2023) ஆரம்பமானது. இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பு இன்று மாலை மலரஞ்சலி செலுத்தப்பட்டது. Read more »

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு

மாவீரர் வாரம் ஆரம்பம்! நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு திறந்து வைப்பு!! மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று மாலை திறந்து வைக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம்... Read more »

திரைப்பட நடிகை குஷ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை! ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு

திரைப்பட நடிகை குஷ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவருகின்றனர் – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! புலிகள் இயக்கத்தினரை திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் பயங்கரவாதிகள் என்று கூறவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் புலிகளை... Read more »

வடக்கின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு – எரிக் சொல்ஹெய்ம் உறுதி

வடக்கு மாகாணத்தின் அனைத்து துறைசார் வளர்ச்சிக்கும் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – எரிக் சொல்ஹெய்ம், வட மாகாண ஆளுநரிடம் உறுதி.   வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச காலநிலை ஆலோசகர் எரிக் சொல்ஹெய்மிற்கும் இடையிலான விசேட சந்திப்பு... Read more »

யாழ் இளைஞனின் மரணத்தில் மேலும் இரு பொலிசாருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சம்பவத்தினால் மேலும் இரு பொலிஸாருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் இளைஞர் உயிரிழந்தமை தொடர்பில் ஏற்கனவே இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு பொலிஸாருக்கு... Read more »