யாழ். சிறையிலிருந்து 16 கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் இன்றையதினம் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ. உதயகுமார தலைமையிலான சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கைதிகளை சிறைச்சாலையில் இருந்து காலை 9 மணிக்கு சம்பிரதாயபூர்வமாக வழியனுப்பி வைத்தனர். ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட... Read more »

யாழில் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதி கேரள கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் – வடமராட்சி, வெற்றிலைக்கேணி பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். வெற்றிலைக்கேணி கடற்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கரை ஒதுங்கிய மூட்டையொன்று மீட்கப்பட்டது. குறித்த மூடையை சோதனை செய்த கடற்படையினர், அதில் 16 பொதிகளில் அடைக்கப்பட்டிருந்த... Read more »
Ad Widget

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை : டெங்கு அச்சம் மட்டுமே

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும் , ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா... Read more »

யாழ் பல்கலை மாணவி உயிரிழப்பு: மருந்து ஒவ்வாமை காரணம்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார் என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்தார். காய்ச்சல்... Read more »

யாழில் இணைய மோசடிகள் அதிகரிப்பு

இணையம் (online) ஊடாக அதிக பணம் ஈட்டலாம் என ஆசை காட்டி பல இலட்ச ரூபாய் பணம் யாழ்ப்பாணத்தில் இணைய மோசடியாளர்களால் மோசடி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாயை இழந்த... Read more »

யாழ் பல்கலை மாணவி திடீர் மரணம்!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க குணரத்தினம் சுபீனா என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல்... Read more »

யாழில் களைகட்டும் கிறிஸ்மஸ் பண்டிகை வியாபாரம்!

யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேவேளை, ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600... Read more »

யாழில் தலைக்கவசம் இன்றி பயணித்த இளைஞர்கள்: பொலிஸ் துரத்தியதில் விபத்து

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள் பொலிஸாரிடமிருந்து தப்புவதற்காக வேகமாக சென்றபோது காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். யாழ்ப்பாணம் பலாலி வீதி கந்தர்மடம் சந்தியில் குறித்த விபத்துச் சம்பவம் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை இடம்பெற்றது. காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்... Read more »

யாழில் 20 இளைஞர்களுக்கு புனர்வாழ்வு

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுப்பட்டு வரும் விசேட... Read more »

பருத்திதுறையில் அதிரடியாக 30 பேர் கைது

மோப்ப நாயின் உதவியுடன் பருத்தித்துறை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் கடந்த 17 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.... Read more »