யாழில் மின்சாரம் தாக்கியதில் நிதி நிறுவன ஊழியர் உயிரிழப்பு!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் பணியாளரை மின்சாரம் தாக்கியுள்ளது. சம்பவத்தில் ,... Read more »

யாழில் நினைவேந்தலுக்கு தடை நிராகரிப்பு!

யாழில் நினைவேந்தல் உரிமையை தடைசெய்யும் பொலிஸாரின் இறுதிக்கட்ட முயற்சி சற்றுமுன்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நினைவேந்தலை தடை செய்ய கோரியும், சிவப்பு மஞ்சள் நிற கொடியை பயன்படுத்த கூடாது என உத்தரவிட கோரியும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் பொலிஸாரின்... Read more »
Ad Widget

யாழில் வாள்வெட்டு சம்பவத்தில் இளைஞர் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பருத்தித்துறை கந்தவுடையார் வீதியை சேர்ந்த ஜெயசந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவரே காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் வீதியில் சென்றுகொண்டிருந்த வேளை... Read more »

யாழில் கொண்டாடப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவரின் பிறந்த தினம்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 69 வது பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வானது இன்று(26.11.2023)வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் தலைவரின் பூர்வீக இல்லத்திற்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய உணவு பகிரல்... Read more »

அபுதாபியில் வேலைக்கு சென்ற யாழ் நபருக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாண பகுதியில் கட்டடத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக கோமாவில் இருந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 55 வயதான முருகேசு விஜயரத்தினம் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடும்பஸ்தர் அபுதாபிக்கு... Read more »

யாழில் நபர் ஒருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (24) பகல் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். கைதான சந்தேக நபர் அனலைதீவிலிருந்து வந்து பொன்னாலை... Read more »

இளைஞன் கொலை! ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கைது செய்ய யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன், தாக்குதலுக்கு இலக்காகி சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அதனாலயே மரணம் சம்பவித்தது என யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தனது சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளார். அதனடிப்படையில் இதுவொரு மனித உயிர்... Read more »

வட்டுக்கோட்டை இளைஞனின் மரண விசாரணை

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை சித்தன்கேணி இளைஞன் அலெக்ஸ் குறித்து விசாரணை இன்று நிடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள்... Read more »

யாழில் சட்டவிரோத கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது!

யாழ்ப்பாணம் – மண்டைதீவில் இறைச்சிக்காக பசு மாடுகளை வாகனத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23-11-2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.... Read more »

யாழில் திடீரென தீப்பற்றி எரிந்த வானால் நிகழ்ந்த அசம்பாவிதம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் (23-11-2023) காலையில் கரவெட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. வானில் ஏற்பட்ட தீயை அணைக்க உரிமையாளர் முயன்ற வேளை தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார... Read more »