இலவசமாக விதை உருளைக்கிழங்கில் சதி

யாழ்ப்பாணம் குப்பிளானில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள விதை உருளைக்கிழங்கு விதைகள் தொற்றுக்குள்ளானமை தொடர்பாக ஆராய கொழும்பில் இருந்து விசேட குழுவொன்று விஜயம் செய்தது. விவசாய அமைச்சு மற்றும் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் உயரதிகாரிகள் குறித்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய... Read more »

அதிபர்கள் இடமாற்றம்: யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

புதிதாக நியமனம் பெற்ற அதிபர்கள் தம்மை கஷ்ட பிரதேசத்திற்கு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக யாழ். மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். புதிதாக நியமனம் பெற்றுள்ள அதிபர்களாகிய தமக்கு புள்ளியிடல் முறைமையின் கீழ்... Read more »
Ad Widget

யாழ். காங்கேசன்துறை விகாரை காணியை மீட்டுத்தருமாறு போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி நடராஜ் காண்டீபன், திஸ்ஸ விகாரைக்கு வரும் பக்தர்களிடம் புத்தரின் சம்பிரதாயங்களை பின்பற்றுமாறு கோரிக்கை விடுப்பது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. “நாங்கள் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம், எங்களுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரைக்கு சென்று... Read more »

யாழில் பௌத்த கொடியுடன் கரையொதுங்கிய தெப்பம்: மக்கள் குழப்பம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் தெப்பம் ஒன்று இன்றைய தினம் கரையொதுங்கி உள்ளது. பௌத்த கொடிகளுடன் குறித்த தெப்பம் கரையொதுங்கியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த தெப்பம் குறித்து மக்கள் மத்தியில குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது Read more »

யாழ். குடாநாட்டின் சுற்றுலாத்துறை பாதிக்கும் நிலையில்

யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தீவுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களை நிர்மாணிப்பதற்காக இந்திய அரசாங்கம் 11 மில்லியன் டொலர் மானியத்தை வழங்கியுள்ளது. யாழ்.குடாநாட்டின் டெல்ஃப், நயினாதீவு மற்றும் அனலத்தீவு ஆகிய தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு மின்சாரம் வழங்கும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கம் இந்த மானியத்தை வழங்கியுள்ளது.... Read more »

யாழில் அதிகரிக்கும் டெங்கு: அச்சுவெலியைச் சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் சாரூரன் (வயது 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா... Read more »

உள்ளூர் உற்பத்தியாளர்களின் கண்காட்சி யாழில் ஆரம்பம்

மார்கழி இசை விழாவுடன் இணைந்த வடமாகாணத்தைச் சேர்ந்த சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் மற்றும் வெளிநாட்டிற்கான சந்தை வாய்ப்பும் யாழில் இன்று காலை ஆரம்பமானது. மேற்படி இசை விழாவும் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களது கண்காட்சியும் விற்பனையும் யாழ். இந்தியத் துணைத்தூதரகம், நல்லூர் சைவத்தமிழ்... Read more »

போயா தினத்தன்று பொலிஸுக்கு மதுபானம் விற்பனை!!!

போயா தினமான இன்று பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதுபானம் விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையத்தில் இன்றைய தினம் இரவு... Read more »

யாழில் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள்

யாழ்ப்பாணத்தில் கைதானவர்களில் சுமார் 70 வீதமானவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் , போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 190 பேர் கைது செய்யப்பட்டனர். கைது... Read more »

யாழில் 9 மாத குழந்தை டெங்கு காய்ச்சல் பலி

யாழில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 09 மாத குழந்தை ஒன்று சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் தாவடி பகுதியை சேர்ந்த குழந்தை காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. அதேவேளை கடந்த... Read more »