அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள் வடக்கு மாகாணத்திலேயே முதலில் நிறைவு செய்யப்பட்டதாக இராஜாங்க நிதி அமைச்சர் தெரிவிப்பு. அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல் இராஜாங்க நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையில் இன்று (13.02.2024) நடைபெற்றது.... Read more »

நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது – அமைச்சர் டக்ளஸ்

நிறைவேற்று அதிகாரம் அவசியமாகவே உள்ளது – இதேநேரம் நாடாளுமன்றத்திற்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் சம தன்மை பேணப்படவேண்டும் என்பதே எனது நிலைப்பாடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு! நாட்டில் நடைமுறையிலுள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை மூலம் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்... Read more »
Ad Widget

படையினரின் அத்துமீறி காணியை அபகரிக்கும் முயற்சி தோற்கடித்த தமிழ் மக்கள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்திக்காக தமிழர்களின் தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி பிரதேச மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக சுவீகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாத நிலையில், முன்னர் விடுவிக்கப்பட்ட 500 ஏக்கர் காணிகளை அபகரிப்பதற்கான முயற்சி நேற்று பிரதேசச... Read more »

நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப்பெறப்பட வேண்டும் கோசலை மதன்

நிகழ்நிலை காப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார். ‘நிகழ்நிலை சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்’ எனும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்றையதினம்... Read more »

”இந்தியாவின் மாநிலமாக இலங்கையின் வடபகுதி”

இலங்கையை அல்லது வடபகுதியை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் செயலாளர் முகமட் ஆலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது இந்தியாவுக்கும்... Read more »

வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதியலில் ஒருவர் பலி!

வீதியில் நெல் உலர்த்துவதற்காக நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வடமராட்சி, மந்திகை மாக்கிராய் பகுதியில் இன்று (11.2.2024) இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  அதிக பனி மூட்டம் கொடிகாமம் கச்சாய் –... Read more »

யாழ். பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் நிலையத்தின் அறையொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை வேளை உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸ்... Read more »

துப்பாக்கிச் சூட்டில் முடிந்த காணித் தகராறு – ஒருவர் பலி

மஹாகும்புக்கடவல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹாகும்புக்கடவல, செம்புக்குளிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். மஹாகும்புக்கடவல , செம்புக்குளிய பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்... Read more »

யாழ்.பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி காலமானார்

வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி தனது 72 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை(10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர் ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும்... Read more »

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி குழம்பியதால் : யாழ் மக்கள் மீது திரும்பும் தேவையற்ற குற்றச்சாட்டுகள்

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில் நடந்த தவறுகளுக்கு உரியவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், நேற்றைய நிகழ்வுகளை வைத்து யாழ்ப்பாண மக்களை பற்றிய தவறான அபிப்பிராயங்களை கட்டமைக்க முன்பாக நிகழ்வு ஏற்பாட்டாளர்களால் ஊடக சந்திப்பொன்று... Read more »