வித்தியா கொலை வழக்கின் குற்றவாளி திடீரென உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். 37 வயதான பூபாலசிங்கம் தவக்குமார் என்பவர் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுகயீனம் காரணமாக நேற்றைய தினம் கண்டி தேசிய... Read more »

இல்ல அலங்காரத்தில் ‘கார்த்திகைப் பூ’ விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்!

யாழில் பாடசாலை இல்ல அலங்காரத்தில் ‘கார்த்திகைப் பூ’ விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்! யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது ‘கார்த்திகை பூ’ இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை பொலிஸாரால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அழைப்பு... Read more »
Ad Widget

தமிழ் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவரா? சுமந்திரன் விளக்கம்

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின்... Read more »

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு டக்ளஸ் தீர்வு

யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்தில் நீண்ட நாட்கள் தரித்து வைக்கப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கலன்கள் மற்றும் இழுவைமடிப் படகுகளால், உள்ளூர் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது போன்ற செயற்பாடுகளுக்கு இடையூறுகளை எதிர்கொள்வதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிடப்பட்ட நிலையில், குறித்த... Read more »

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம்

ஆரம்ப பாடசாலைகளுக்கும் உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை அவசியம் – நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை! ஆரம்ப பாடசாலைகளுக்கான உடற்பயிற்சி ஆசிரியர்களது பதவிநிலை மற்றும் நியமனம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டுதருமாறு கல்விச் சமூகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.... Read more »

நடைமுறை சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலை எரியூட்டி

சவால்களை எதிர்கொண்டு உருவாகியுள்ள எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து உச்சபட்சமான நன்மைகளை பெற்ற வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து! பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை பெற்றுக்கொள்ள... Read more »

வட்டு இளைஞன் படுகொலை: சந்தேகநபர்களின் தொலைபேசி உரையாடல்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு... Read more »

கோடிக்கணக்கான உருளைக்கிழங்குகள் எரியூட்டல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான விதை உருளைக்கிழங்குகள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளன. இந்நிலையில், உருளைக்கிழங்கு பழுதடைந்த விவகாரம் தொடர்பில் மாகாண மட்ட விசாரணைக் குழுவை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்,... Read more »

வலி. வடக்கின் 07 ஆலயங்களில் வழிபட அனுமதி

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய... Read more »

யாழ். கீரிமலை ஜனாதிபதி மாளிகை பகுதியில் பதற்றம்

யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் இன்று காலை 10 மணியளவில் வருகை தந்திருந்தனர். இதன்போது குறித்த காணி அளவீட்டுக்கு உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பை வெளியிட்டு,... Read more »