வெளிநாட்டிற்கு செல்லும் அனுரகுமார திஸாநாயக்க

ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். தென்கொரியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள், தொழில் புரிபவர்கள் மற்றும் மாணவர்கள் விடுத்த அழைப்பையேற்றே அநுர அங்கு செல்கின்றார். மேலும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன், இலங்கையின் நடப்பு விவகாரம் பற்றி அவர் சிறப்புரையாற்றவுள்ளார். Read more »

இயந்திரத்துடன் வாழ்ந்து வந்த சிறுமி உயிரிழப்பு!

வாகன விபத்தில் தலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி 13 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிர்காக்கும் இயந்திரத்தின் ஆதரவில் இருந்த பத்து வயது மாணவன் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 1047/02 பன்னிபிட்டிய வீதி, பத்தரமுல்லவில் வசிக்கும் குமார வடுகே பசிந்து பதியா... Read more »
Ad Widget

திருகோணமலை கடற்கரையில் குவிந்த மர்ம பொருள்

திருகோணமலை கடற்கரையில் நேற்றிரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர். தார் போன்ற பொருட்கள் சிறு துண்டுகளாகவும், கட்டிகளாகவும் வருவதாகவும் அவை ஒட்டும் தன்மை கொண்டதாக உள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். தார் கட்டிகள் போன்ற வெளிநாட்டு பொருட்கள்... Read more »

இலங்கை இந்திய பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும், தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளிலும், இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடுகளிலும் உள்ளார்ந்த முரண்பாடு உள்ளதாக இந்திய இணையம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இரண்டு தரப்புக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதை... Read more »

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, முன்கூட்டியே நேரத்தை ஒதுக்கிக்கொண்ட விண்ணப்பதாரிகளைத் தவிர, வேறு நபர்களுக்கு இன்று (12) சேவை வழங்கப்பட மாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று நேரத்தை ஒதுக்கிக்கொண்டவர்கள், தங்களது விண்ணப்பங்களை மதியம் 12 மணிக்கு முன்னதாக, தமது... Read more »

மதுபான கடைகளுக்கு பூட்டு!

நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான கடைகள் நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிங்கள – தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மதுபான கடைகள் மூடப்படவுள்ளது. சட்டவிரோத மதுபானங்களை சுற்றிவளைக்கும் விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம்... Read more »

பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் மீள ஆரம்பிப்பதற்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முறையற்ற வரி கொள்கை உள்ளிட்ட சில விடயங்களை வலியுறுத்தி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்... Read more »

வவுனியாவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் காலமானார்

வவுனியா மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார். ரொய்ட்டர், பிபிசி, வீரகேசரி மற்றும் மின்னிதழ்களில் செய்தியாளராகவும் கட்டுரை ஆசிரியராகவும் செயற்பட்டுவந்த பொன்னையா மாணிக்கவாசகம், நள்ளிரவு (12) 12.40 மணி அளவில் இம்மண்ணுலக வாழ்வை முடித்துக்கொண்டு எம்மிடமிருந்து விடைபெற்றார். அன்னார் நாட்டின் நெருக்கடியான காலகட்டங்களில்... Read more »

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி

நிதியமைச்சு பாடசாலை புத்தகப் பைகள் மற்றும் காலணிகளின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், மாண்வரகளுக்கு காலணிகள் மற்றும் பைகளை கொள்வனவு செய்வதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்... Read more »

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள செய்தி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு சீனா ஆதரவளிக்கும் என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தமது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டத்தொடரில்; பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள அவர், அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றிடம் இதனைக்... Read more »