சாரதியால் தவிர்க்கப்பட்ட பாரிய விபத்து..! காப்பாற்றப்பட்ட 30 பயணிகள்.

பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர், பயணிகள் பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்து 30 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினர். நேற்று முன்தினம் மாலை, பதுளையில் இருந்து பத்தேவெல, தெமோதர வழியாக பல்லகெட்டுவ நகரத்திற்கு சென்ற பண்டாரவளை போக்குவரத்து சபை பேருந்தில்... Read more »

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்..!

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜராகியதை தொடர்ந்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் நடத்தப்பட்ட விசாரணைகளுக்காக தன்னை... Read more »
Ad Widget

எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் அத்துரலிய ரத்தன தேரர்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுகேகொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துரலிய ரத்தன தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். Read more »

உள்ளுர் உற்பத்திகளை அதிகரிக்க உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

வடக்கு மாகாணத்தில் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்க உள்ளூராட்சி மன்றங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தின் காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்; வடக்கு மாகாணத்தில் இலட்சக்கணக்கான பனை மரங்கள் உள்ளன.அதன் ஒவ்வொரு... Read more »

வீட்டுக்கு திரும்பிய ரணில்..!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்று வௌியேறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில் இருந்து வௌியேறினாலும், மருத்துவ ஆலோசனையின்படி அவர் வீட்டிலேயே ஓய்வெடுப்பார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.... Read more »

பாணதுறை பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

பாணதுறை, வந்துரமுல்ல, அலுபோகிவத்த பகுதியில் வசித்துவந்த 55 வயதுடைய நபர் ஒருவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் பேச்சாளர் கருத்துப்படி, இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திலேயே... Read more »

அமெரிக்க போர்க்கப்பல் யு.எஸ்.எஸ். துல்சா (USS Tulsa) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். துல்சா (USS Tulsa – LCS 16) என்ற கடலோரப் போர் கப்பல் எரிபொருள் நிரப்புதல் மற்றும் விநியோக தேவைகளுக்காக ஆகஸ்ட் 27 அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. பல்துறைத்திறனுக்காக வடிவமைக்கப்பட்ட யு.எஸ்.எஸ். துல்சா,... Read more »

கல்முனை மாநகர சபை ஊழியர் விபத்தில் மரணம்!!!

கல்முனை மாநகர சபையில் காவலாளி கடமை புரிகின்ற பாஸ்கரன் என்பவர் கடமை முடிந்து பெரிய நீலா வணையில் உள்ள தனது வீடு நோக்கி செல்கையில் இன்று காலை(28) மருதமுனை யில் இடம் பெற்ற வாகன விபத்தில் மரணமடைந்தார். சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read more »

நாமலின் சதிதிட்டம் அம்பலமானது..! வேலைநிறுத்தம் தோல்வி கண்டது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ இலங்கையின் போக்குவரத்தை முடக்குவதற்காக மேற்கொண்ட சதி முறியடிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருவதுடன், அதற்கு ஏற்றவாறான நேர அட்டவணைகளையும் வகுத்திருந்தது. குறித்த நேர... Read more »

கொழும்பு நீதிமன்றம் முன் அமைதியின்மையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணையின் போது கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் சட்டவிரோதமாக நடந்து கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில்கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப்... Read more »