வைத்தியசாலையில் தாக்குதலுக்கு இலக்கான மனநோயாளி உயிரிழப்பு!

கொழும்பில் உள்ள அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸார் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிழந்தவரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த தாக்குதல் சம்பவத்தில் வட்டரெக... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது!

ஒரு மில்லியன் ரூபா (இலங்கை மதிப்பில் 24 கோடி) பெறுமதியான போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களில் மூவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 30 கிலோ செயற்கை கஞ்சாவுடன் முதலில் கைது செய்யப்பட்டதாக... Read more »
Ad Widget

இலங்கையில் தங்க நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கத்தின் விலை... Read more »

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவர்கள்

மொனராகலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் மொனராகலை, தம்பகல்ல பிரதேசத்தில் நேற்றைய தினம் (27-07-2023) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இரு மாணவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு... Read more »

கோதுமை மா விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை 15 சதவீம் அதிகரித்துள்ளது. கருங்கடல் வழியாக தானிய போக்குவரத்துக்கு ரஷ்யா அனுமதிக்காததால் உலக சந்தையில் இவ்வாறு கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவில் இந்த முடிவின் மூலம் எதிர்காலத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக... Read more »

நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட புகையிரத சேவை

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி, ஆலய மகோற்சத் திருவிழா எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில், பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரி தொடருந்து சேவையை முன்னெடுக்கவேண்டும் என தொடருந்து திணைக்கள பொது முகாமையாளருக்கு , நல்லை ஆதீன குரு... Read more »

செப்டெம்பர் முதல் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள திட்டம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை தொகை மதிப்பு, புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.அனுரகுமார வழங்கியுள்ளார். அதன்படி பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்சி பெறும் திட்டங்களுக்கு அமைய 15ஆவது குடிசன, வீட்டு வசதிகள் தொகை மதிப்பாய்வு... Read more »

இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பில் விசேட அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் நீண்ட நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் குறித்த முட்டைகளை வெளியே வைத்து பயன்படுத்தினால் அவற்றை மூன்று நாட்கள்... Read more »

அஸ்வெசும நலன்புரி திட்ட வரிசையில் காத்திருந்தவர் பரிதாப மரணம்

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம் பெற காத்திருந்தவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று காலை எல்ல பிரதேச செயலக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் நமுனுகுல – தன்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த ராமையா குழந்தைவேலு (வயது 76)... Read more »

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ்ச்சிக்கு உள்ளாகிய இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து... Read more »