சீரற்ற காலநிலையால் 8900 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 8900 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆறு மாவட்டங்களில் 2,373 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 8,974 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி, பதுளை, கம்பஹா, மாத்தறை, காலி... Read more »

சட்டத்தரணி வீட்டிற்குள் திருட்டு

கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணி ஒருவரின் கொழும்பிலுள்ள வீட்டுக்குள் நுழைந்து திருடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளிநாட்டு நாணயத்தாள்கள், எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் உபகரணங்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்வத்த மீகஹகோவில வீதியைச் சேர்ந்த 32 மற்றும் 37 வயதுடைய... Read more »
Ad Widget

8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சிறுவன்!

புத்தளத்தில் 8 வயது சிறுமியை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 15 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலேயே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கதெனிய – கொட்டபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும்... Read more »

சாரதி அனுமதிப்பத்திர சேவைகள் இடைநிறுத்தம்

அனுராதபுரம் மாவட்ட காரியாலயத்தில் இன்று (16) மற்றும் நாளை (17) சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்றும் நாளையும் அந்த அலுவலகத்தில்... Read more »

பதவி துறந்த உயர் அதிகாரிகள்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீரென தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை அண்மைக் காலமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் விற்பனை மற்றும் நிதித் துறைகளில் பணியாற்றிவந்த தலைவர்கள் உட்பட பல அதிகாரிகள் தமது பதவியை இராஜினாமா... Read more »

அரச ஊழியர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

2024ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கடந்த வருடத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதால் அது வரவு செலவு திட்டத்தில்... Read more »

இரண்டாம் தவணை பரீட்சை ஆரம்பம்

தென் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை பரீட்சை இன்று ஆரம்பமாகின்றது. கடந்த வாரம் நடைபெறவிருந்த பரீட்சைகள் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தென் மாகாண கல்வி திணைக்கள அலுவலகம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக... Read more »

தனக்கு தானே தீ வைத்த நபரால் பரபரப்பு!

வாழைச்சேனையில் போதைப்பொருள் பாவனையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கட்டிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (15) மாலை வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஞ்சோலை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில்... Read more »

தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்ப்பணம்

தீபாவளி முற்பணமாக மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இம்முறை 20 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கோரிக்கை கடிதம், பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இன்று (16) கையளிக்கப்படும் எனவும் அவர்... Read more »

இலங்கை கடற்படையினர் கைப்பற்றிய இழுவை படகுகள்

இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை விரட்டுவதற்கு கடந்த (14.10.2023) ஆம் திகதி இலங்கை கடற்படையினர் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தனித்தனியான நடவடிக்கைகளின் மூலம் மன்னார் மற்றும் இலங்கை கடற்பரப்பில் வேட்டையாடிய 27 இந்திய பிரஜைகளுடன் 05 இந்திய இழுவை படகுகள்... Read more »