களனி பல்கலைக்கழகத்தின் நான்கு மாணவர்கள் இடை நீக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கடத்தி, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்த இடைநீக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக களனி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. Read more »
மின்சாரத்தை துண்டிக்கச்சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்ட சம்பவம் கம்பஹாவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான இரு ஊழியர்களும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மின் கட்டணம் செலுத்தாத நிலையில், மின்சாரத்தை துண்டிக்க சென்ற... Read more »
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 77,487 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 746 பேர் உயிரிழந்துள்ளதாக... Read more »
புதிதாக 2600 கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். இதற்கான பரீட்சை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர் கிராம உத்தியோகத்தர்கள் சேவையில் இணைத்துக்... Read more »
ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தின் போது இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மீள கையளிக்கப்பட்ட சில தொல்பொருட்கள் இன்று முதல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. 1756 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிகாலத்தில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட குறித்த தொல்பொருட்கள் அண்மையில் உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் குறித்த... Read more »
ஐந்தாம் புலமைப்பரிசில் பரீட்சையை இல்லாது செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று(05.12.2023)கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். 5ம் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்... Read more »
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்கள் சிலவற்றுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இன்றையதினம் (05-12-2023) பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற நுழைவு வீதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என... Read more »
கல்கிரியாகம , கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பகுதிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிரியாகம பிரதேசத்தில் இரண்டு உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 45 வயதுடைய நபரொருவரும் கல்கமுவ மற்றும் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் கைது... Read more »
இலங்கைக்கு சுற்றுலா வந்த பிரித்தானிய பெண் ஒருவர் எல்ல – பசறை பிரதான வீதியில் உள்ள சிறிய சிவனொளிபாதமலையை பார்வையிட சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார். குறித்த பெண் செலுத்திய உந்துருளி வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார்... Read more »
அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது மக்களுக்கு கடினமாக உள்ளது. அவர்களுக்கு பல்வேறு சட்டவிதிகள் உள்ளன. அதனால்தான் பெரும்பாலும் இவ்வாறான நுண்கடன் நிறுவனங்கள் மூலம் மக்கள் கடன் பெறுகிறார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்திய வங்கிக்குப் பதிலாக, நுண்கடன் நிறுவனங்களை... Read more »

