மதுபான விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதம்: நபர் ஒருவர் அடித்துக் கொலை

புத்தளம், சாலியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை கொலை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து அறையின் கதவை உடைத்து அங்கிருந்த நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தடியொன்றினால் தாக்கியே குறித்த நபரை கொலை... Read more »

புதிய சபாநாயகர் பிமல் ரத்நாயக்க: சபை முதல்வர் விஜித ஹேரத்

பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பிமல் ரத்நாயக்க தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்க உள்ளார். நாடாளுமன்றத்தில் சபைத் தலைவராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம்... Read more »
Ad Widget

தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றுபடுத்த முயற்சி: சிவகரன்

எதிர்வரும் நாள்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகத் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கம் அறிவித்திருக்கின்றது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் வி.எஸ். சிவகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தமது உத்தேச முயற்சி பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றார். அதில் கூறப்பட்டுள்ளவை வருமாறு:-... Read more »

புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம்

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வின் போது புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் இன்று சனிக்கிழமை இதனைத் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் பிற்பகல்... Read more »

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாள் செயலமர்வு

10ஆவது நாடாளுமன்றத்திற்கு தேர்வான புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாளைய தினம் நிகழ்நிலையில் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவர்கள் தமக்குத் தேவையான... Read more »

ஜே.ஆருக்குப் பின்னர் பலம் வாய்ந்த அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவுக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அரசாங்கத்தை சமகால ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமைக்க உள்ளதுடன், 25 பேருக்குள் அமைச்சரவை மட்டுப்படுத்தப்படும் என அரச தகவல்கள் தெரிவித்தன. இலங்கை வரலாற்றில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தவராக இன்றளவும் பிரபல்யமாக உள்ளவர் முன்னாள்... Read more »

நாடாளுமன்றத்துக்கு மலையகத் தமிழர்கள் 8 பேர் தெரிவு

மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி 8 உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு மலையகத் தமிழர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட கிஷ்ணன் கலைச்செல்வி... Read more »

பிரபல தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலில் தோல்வி

இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களுடைய ஆசனங்களை இழந்துள்ளனர். இதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கொழும்பு மாவட்டத்தில் தோல்வியடைந்துள்ளார்.... Read more »

ஆசனத்தை கைப்பற்றிய அர்ச்சுனா

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளது. தற்போது வெளியாகிய நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.  மூன்று ஆசனங்களை கைப்பற்றி உள்ளது தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ்கட்சி பிளவுபட்டு... Read more »

பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு நிறைவு : 65 வீதம் பதிவு

இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல்  பிற்பகல் 4 மணிவரை நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் அமைதியான வாக்குப் பதிவுகள் நடைபெற்ற நிலையில், சில இடங்களில் வன்முறைச்... Read more »