நாட்டில் அரிசிக்கு தொடரும் தட்டுப்பாடு – நுகர்வோர் குற்றச்சாட்டு!

நாட்டின் பல பகுதிகளில் அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். அத்துடன் சதொச ஊடாக அரிசியை விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அங்கு அரிசி மற்றும் தேங்காய் என்பன கையிருப்பில் இல்லை எனவும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர். அதேநேரம் தங்களது மாதாந்த நுகர்வு பொருட்களுக்கான... Read more »

நான்கு வலம்புரி சங்குகளை விற்க முயன்ற இருவர் கைது !

புத்தளம் – மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசங்களை சேர்ந்த 41 மற்றும்... Read more »
Ad Widget

இலங்கையில் இப்படியும், அசிங்கங்கள் நடைபெறுகிறது

வெளிநாட்டில் உள்ள ஒருவரின் காதலியை நண்பியாக்கி, வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தின் ஊடாக, நிர்வாண வீடியோவை அனுப்பி வைத்து தொடர்பினை வைத்திருந்தார் எனக் கூறப்படும் இளைஞனை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம், கஹத்துடுவ ​பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அவ்விளைஞனை... Read more »

வடக்கில் வெள்ளம் கடலைச் சேர்வதை தடுத்தமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, நாவற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் வடிந்தோடாமையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்... Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்ட விபத்து ஒன்று தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.... Read more »

காலநிலையில் மாற்றம்; வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு!

அடுத்த சில நாட்களில் நாட்டின் காலநிலையில் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தினால், டிசம்பர் 10ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், மேற்குறிப்பிட்ட நிலைமையுடன் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும்... Read more »

ஒருவருக்கு 5 கிலோ அரிசி – இன்று முதல்

இன்று முதல் வெளி மாகாணங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாட்டு அரிசி மற்றும் தேங்காய்களை கொள்வனவு செய்ய முடியும். கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களுக்கு நேற்று அரிசி மற்றும் தேங்காய் விநியோகம் செய்யப்பட்டதாக... Read more »

வாடகை செலுத்தும் அரச நிறுவனங்கள், அரச கட்டிடங்களுக்கு

அதிக வாடகை செலுத்தி பல்வேறு கட்டிடங்களில் இயங்கும் அரச நிறுவனங்களை அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடங்களுக்குள் கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை இயங்கும் அலுவலகத்தின் மாதாந்த வாடகை... Read more »

சபாநாயகரின் பட்டம் பொய் என்றால் இராஜினாமா செய்ய வேண்டும்

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகைமை தொடர்பில் உண்மையான தகவல்களை முன்வைத்திருந்தால் அதற்கு அடிபணியுமாறு கோர வேண்டும் என கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். இல்லை என்றால் பதவி நீக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள்... Read more »

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு இன்று நள்ளிரவு வரை காலக்கெடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று(06) நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதுவரை சுமார் 20வீதமான அறிக்கைகள் மாத்திரமே மாவட்ட மட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்... Read more »