வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வலுவடைந்து மேற்கு – வடமேற்குத்... Read more »
குடிசன மதிப்பீடுகளுக்கு வரும் உத்தியோகத்தருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்பு நடவடிக்கைகளுக்காக வீடுகளுக்கு வரும் உத்தியோகத்தர்களுக்கு, முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் தேவையான தகவல்களை வழங்குவதில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குடிசன மதிப்பீட்டு கணக்கெடுப்புக்கு... Read more »
கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி... Read more »
சந்தையில் தேங்காய்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் தேங்காய் சம்பல் மற்றும் தேங்காய் பாலில் செய்யப்பட்ட குழம்பு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை நடத்துவோர் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷன் தெரிவித்துள்ளார். ஒரு... Read more »
மாத்தறை , கொடவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிரிஸ்ஸ கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ரஷ்ய தம்பதி ஒன்று மாத்தறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளது. ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 40 வயதுடைய... Read more »
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் கால தாமதமின்றி நடத்த வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். அடுத்த வருட இறுதி வரைக்கும் காத்திருக்காமல், உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நிறைவடைந்தவுடன் மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம்... Read more »
வாடகைக்கு பயணிப்பதாக தெரிவித்து, வாடகை வாகன சாரதிகளிடம் உள்ள தங்க நகைகளை சூட்சுமமான முறையில் கொள்ளையிட்டு வந்த நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் ஏறி சாரதிக்கு போதைப்பொருளை குடிக்கக்... Read more »
உப்பு உற்பத்தியின் போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களை முன்வைத்து நிறுவனங்கள் இந்த அனுமதியை கோரியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். இது தொடர்பில் தொழில் அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார். இந்த விடயம் தொடர்பில் இலங்கை உப்பு நிறுவனத்திடம்... Read more »
தென்கிழக்கு வங்கக் கடலின் ஆழ்கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுதல் மற்றும் பயணிக்கும் கப்பல்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்... Read more »
பொலன்னறுவை பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் இன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அரிசி ஆலைகளில் தினசரி உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவு, தற்போதை கையிருப்பு மற்றும் சந்தைக்கு விநியோகம் செய்யப்படும் அரிசியின் அளவு தொடர்பான அறிக்கையைப் பெறுவதற்கு... Read more »

