சபையில் சர்ச்சையை ஏற்படுத்திய அர்ச்சுனா எம்.பி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா சபையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்படும் ஆசனத்தில் அமர்ந்திருந்தமை அனைவரதும் கவனத்தை ஈர்த்திருந்ததுடன், இவர் நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மீறியுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. முதல் அமர்வில் நாடாளுமன்றத்துக்குத்... Read more »

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி பிற்போடல்

நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நாளை (22.11.2024) வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவிருந்த கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி புயலுடன்கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதன் காரணமாகப் பிற்போடப்பட்டுள்ளது. வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியை சிறப்பான முறையில் நடாத்தி வந்துள்ளது. இந்த... Read more »
Ad Widget

மிகப்பெரிய வெள்ள அனர்த்தம் ஏற்படும்

“எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கிடைக்கவுள்ள கனமழை மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும்” – இவ்வாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் துறைத்தலைவரும் அங்கீகரிக்கப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு, 21.11.2024 வியாழக்கிழமை மதியம்... Read more »

சிறீதரனால் மாவீரர்களின் பெற்றோர் கெளரவிப்பு

கிளிநொச்சி – பெரிய பரந்தன் வட்டாரத்திலுள்ள மாவீரர்களின் பெற்றோர்கள் கெளரவிப்பு நிகழ்வு உருத்திரபுரம் முருகன் ஆலய அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. பெரிய பரந்தன் வட்டார இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அமைப்பாளர் சு. யதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற... Read more »

குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது! ஜனாதிபதி அநுர உறுதி 

“நான் உங்களுக்கு உத்தரவாதம் தருகிறேன். சர்ச்சைக்கு வழிவகுத்த குற்றங்கள், அதற்கு காரணமானவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு, அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். சட்டத்தையும் நீதியையும் அனுமதிக்கும் ஒரு அரசு நமக்குத் தேவை” பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின்... Read more »

அரிசி தட்டுப்பாட்டை போக்க 70 மெட்ரிக் தொன் இற்குமதி

சந்தையில் அரிசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க 70ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் இந்த அரிசியை இறக்குமதி செய்து உற்சவக்காலத்தில் மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதிருக்க... Read more »

பதவி விலகப் போவதில்லை: ருஹுணு பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவிப்பு

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும், ருஹுணு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், சிரேஷ்ட பேராசிரியர் சுஜீவ அமரசேன திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் பதவி விலகப்போவதில்லையென அவர் உறுதியாக கூறியுள்ளார். ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரை பதவி... Read more »

நான்கு வயது சிறுமி: மாரடைப்பால் மரணம்

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் – லாவண்யா தம்பதியின் மகள் பிரஹர்ஷிகா. நான்கு வயதான இவர் வெளியில் சென்ற தாய் வீட்டுக்கு வந்ததைக் கண்ட மகிழ்ச்சியில் அம்மா என அழைத்தவாறு அவரை நோக்கி ஓடிச் சென்றுள்ளார். அப்போது... Read more »

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு: இன்று ஒத்திகை

பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு (21) ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான ஒத்திகை (20) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. நாளை மு.ப 9.55க்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு மு.ப 10 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும், நாடாளுமன்றத்தைக் கூட்டும் ஜனாதிபதியின் பிரகடனத்தை... Read more »

இந்திய மீனவர்களின் 13 படகுகள்: கடற்படைக்கு வழங்க அரசு உத்தரவு

இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றத்துக்காகத் தமிழக மீன்வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 13 படகுககளைக் கடற்படையினரின் பயன்பாட்டுக்காக வழங்குமாறு புதிய ஆட்சிப்பீடம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கும்... Read more »