பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் நியமனம்!

பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர் ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக கே.டி.ஆர்.ஒல்கா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று ஜனாதிபதி... Read more »

சாதாரண தரப் பரீட்சை – விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீடிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2024 (2025) ஆண்டுக்கான விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களுக்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »
Ad Widget

புதிய அரசியலமைப்பில் மாகாண சபை முறைமை நீக்கம்: ரில்வின் சில்வா

இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள மாகாண சபை முறைமையை முடிவுக்குக் கொண்டு வரவும், புதிய அரசமைப்பின் ஊடாக அனைத்து இன மக்களுக்கும் சமமான உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யவும் தேசிய மக்கள் சக்தி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று... Read more »

வட்டி விகிதத்தை நிலையாக பேணுவது அவசியம்: ஆளுநர் விளக்கம்

பணவீக்கம் அதிகரிக்காத வகையில் நிலையான வட்டி வீதத்தை பேணுவது மத்திய வங்கியின் பொறுப்பாகும் எனவும், கடந்த காலங்களில் அவ்வாறு நடக்கவில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ள போதிலும், தற்போதைய நிதிக் கொள்கையின்படி... Read more »

மாகாண சபை முறைமை அகற்றப்படுவதை ஏற்க முடியாது: மனோ

“மாகாணசபை என்பதை நாம் ஏற்க மாட்டோம். ஆனால், இன்றைய மாகாணசபை முறைமை என்பது தமிழ் மக்களின் போராட்டங்களால் கிடைக்க பெற்றது. ஆகவே, அதை நாம் எதிர்க்கவும் போவதில்லை” என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கடந்த தேர்தல்களுக்கு முன் என்னிடம் நேரடியாக கூறியுள்ளார். பல... Read more »

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவு.!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (02) உத்தரவிட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசியப்பட்டிருந்தது. இதனையடுத்து,... Read more »

காற்றின் தரம் குறைவு !

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் சில தினங்களுக்கு இந்த நிலை தொடரலாம் என சுற்றாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார். Read more »

புதிய பிரதம நீதியரசர் இன்று பதவியேற்பு

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து பெர்னாண்டோ இன்றைய தினம் (02) பதவியேற்கவுள்ளார். பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் அங்கீகாரம் வழங்கியிருந்தது. பிரதம நீதியரசர் ஜயந்த... Read more »

கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்; மூவர் கைது.!

இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பொரளை – கொட்டாவ வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர்... Read more »

வெதுப்பகம் ஒன்றில் தீ விபத்து.!

கொழும்பு, கொஹுவலை பிரதேசத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் ஒன்றிற்கு அருகில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (02) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவளை தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீப் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும், தீ விபத்தின் போது எந்தவித உயிர்ச்... Read more »